செய்திகள் :

பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் முதல் ரயில் இயக்கம்! வெளியானது அறிவிப்பு

post image

சென்னை: புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்தது போலவே, பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்றும், மார்ச் மாதம் என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் தேதியும் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருந்த பாம்பன் ரயில் பாலம் சேதமடைந்து, பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி ரூ.550 கோடியில் தொடங்கியது.

கட்டுமானப் பணிகள் முடிந்து, ரயிலை இயக்கியும் கப்பல்கள் வரும் போது பாலத்தை உயர்த்தியும் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாம்பன் பாலம் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முதலில் ஜனவரி என்றார்கள், பிறகு பிப்ரவரி இறுதி என்று தகவல்கள் வெளியாகின. பாலத்தைத் திறக்கக் கோரி ஒரு பக்கம் போராட்டங்களும் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், மார்ச் மாதம் பாம்பன் பாலம் திறக்கப்படும் என்றும், பிரதமர் மோடியே பாலத்தை திறந்து வைக்க விருக்கிறார் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையி... மேலும் பார்க்க

முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை: அண்ணாமலை

முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை, எங்களுக்கு தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அமெரிக்காவை பொருத்தவரை டிரம்ப் ஒரு விஷயத்தை சொல்லி மக்களின் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் (பிப். 15, 16) வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும் நாளையும்(பிப். 15, 16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்... மேலும் பார்க்க

சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெள... மேலும் பார்க்க

மயிலாடுதுறை படுகொலை சம்பவத்துக்கு முன்பகைதான் காரணம்: காவல்துறை விளக்கம்!

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய சம்பவத்தில் முன்விரோதம்தான் காரணம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து... மேலும் பார்க்க

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க