செய்திகள் :

சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!

post image

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெளியிட்ட நிலையில், விடியோவைப் பகிர்ந்த இயக்குநர் பா. ரஞ்சித், முதல்வரிடம் சாதிய வன்கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித், தனது எக்ஸ் பக்கத்தில் ``தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்குதடையின்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களா?

தங்கள் அமைச்சரவையின்கீழ் இயங்கும் ஆதி திராவிட துறை அமைச்சர், அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் பட்டியலினத்தவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணலில் கேள்விக்கு பதிலளிப்பது போன்ற விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விடியோவில் மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து, பாலியல் குற்றங்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார்.

இதையும் படிக்க:திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வா... மேலும் பார்க்க

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் - முதல்வர்

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண... மேலும் பார்க்க

சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையி... மேலும் பார்க்க