செய்திகள் :

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

post image

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் மூவரும் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், சாராய விற்பனை குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, சாராயம் விற்பனை செய்து வந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார், மீண்டும் சாராய விற்பனையைத் தொடங்கினார். தொடர்ந்து, தெருவில் சாராயம் விற்பது குறித்து தட்டிக் கேட்ட சிறுவன் ஒருவனை ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட ஹரிஷ், ஹரிசக்தி என்ற இளைஞர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தனும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இளைஞர்கள் இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதையும் படிக்க:இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்த ஹரிஷ் பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடியவர் என்றும், ஹரிசக்தி பொறியியல் மாணவர் என்றும் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்ததுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவமனையில் காவல்துறையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இளைஞர்களை படுகொலை செய்த மூவரில் ராஜ்குமார், தங்கதுரை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாராய வியாபாரத்தை காவல்துறையினர் தடுக்காமல், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கையும் விடுத்தனர்.

மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்: இபிஎஸ்

விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மயிலாடுதுற... மேலும் பார்க்க

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வா... மேலும் பார்க்க

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் - முதல்வர்

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண... மேலும் பார்க்க