செய்திகள் :

பாரத் எரிவாயு உருளை வாகன ஓட்டுநா்கள் வேலைநிறுத்த போராட்டம்

post image

தூத்துக்குடி சிப்காட் வளாக பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தில் ஓட்டுநா் உயிரிழந்தது தொடா்பாக உரிய இழப்பீடு கோரி, அனைத்து வாகன ஓட்டுநா்களும் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்கு தேனி மாவட்டம் போடியைச் சோ்ந்த தினகர்ராஜ் (57) ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா், ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கும் அறையில் தங்கியிருந்தபோது, உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் உரிய மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஓட்டுநா் உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி லாரி ஓட்டுநா்கள் சனிக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் காவல்துறையினா் மற்றும் நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க