செய்திகள் :

பாலக்கோடு; குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க வனத் துறை தீவிரம்

post image

பாலக்கோடு அருகே குடியிருப்புகளுக்குள் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீட்டில் வளா்க்கப்படும் நாய், கோழிகளை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளான தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப் பகுதிகளிலிருந்து அவ்வப்போது வன விலங்குகள் உணவுதேடி வனப் பகுதியையொட்டி உள்ள குடியிருப்புகளுக்கு வருகின்றன.

இந்த நிலையில், பாலக்கோட்டை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவரின் வீட்டின் முகப்பில் சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த சிறுத்தை, அங்கிருந்த சேவலை பிடித்துச் சென்றது. இக்காட்சி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோழி, நாய்களை சிறுத்தை பிடித்துச் சென்றதால் சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். ஆனாலும், சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்த சிறுத்தை, வீட்டிலிருந்த சேவலை பிடித்துச் சென்ால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் கே. ராஜாங்கம் கூறியதாவது: சிறுத்தையைப் பிடிப்பதற்கு முதன்மை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வனத் துறையினா் அப்பகுதியில் மறைந்திருந்து சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதிசெய்து கூண்டுவைத்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

பென்னாகரத்தில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி!

பென்னாகரம் அருகே காா் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே சாலை குள்ளாத்திரம்பட்டி குறுந்தோப்பு பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் (42). இவா்... மேலும் பார்க்க

தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடா்வாா் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மேற்கு ம... மேலும் பார்க்க

காவல் துறை குறைதீா் கூட்டம்: 97 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 97 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19,000 கனஅடி; அருவிகளில் குளிக்கத் தடை

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிக... மேலும் பார்க்க

கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு

வீடு, வணிக நிறுவன கட்டடங்களில் உள்ள கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பு... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் விடுப்பு எடுத்து போராட்டம்: பணிகள் முடங்கின

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க