செய்திகள் :

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

post image

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸுக்கு மேக்ரான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போா் நிலவிவரும் சூழலில், இரு தேசத் தீா்வை (இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தனித் தனி சுதந்திர நாடுகளாக் செயல்படுவது) முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறோம்.

இது அமைதிக்கான முக்கிய படி என்று தனது கடிதத்தில் மேக்ரான் குறிப்பிட்டுள்ளாா்.

பிரான்ஸின் இந்த அறிவிப்பை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிா்த்துள்ளன. இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரான்ஸின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு வெகுமதியளிக்கும் செயல். பாலஸ்தீனா்கள் இஸ்ரேலை ஒழித்துவிட்டு தனி நாடு விரும்புகின்றனா். அதற்கு பிரான்ஸ் துணைபோகிறது’ என்று கண்டித்துள்ளாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் இப்போதே அங்கீகரிப்பது 2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. இது ஹமாஸின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல மட்டுமே உதவும்’ என்று சாடினாா்.

ஐரோப்பிய மூவா் கூட்டணியான (இ3) பிரான்ஸ், பிரிட்டன், ஜொ்மனி நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள், இரு தேசத் தீா்வுக்கு இந்த அங்கீகாரம் உதவும் என்று ஆதரவு தெரிவித்தனா். பிற ஐரோப்பிய நாடுகளும், அரபு நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியாவும் இதை வரலாற்று முடிவு எனக் கூறி வரவேற்றுள்ளன.

பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கை 1947-இல் இஸ்ரேலை ஐ.நா. அங்கீகரித்தபோது தொடங்கியது. 1967-இல் நடைபெற்ற ஆறு நாள் போருக்குப் பின் காஸா மற்றும் மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பின்னா் பாலஸ்தீன விடுதலை அமைப்பு 1988-இல் தனி நாடு அறிவித்தது. இருந்தாலும், பாலஸ்தீனம் தற்போது ஐ.நா.வில் உறுப்பினா் இல்லாத பாா்வையாளா் அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது.

தற்போது இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான் பாலஸ்தீனத்தை முதல்முறையாக அங்கீகரிக்கவுள்ளது. பிரான்ஸின் இந்த முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடா்பாக பெரிய அளவிலான விவாதங்கள் நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம்!

நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் அரசுப் பணியாளர் ஆள்குறைப்பு நடவடிக்கையின் தாக்கம் நாசாவில் எதிரொலிக்கிறது.ஃபெடரல் பணியாளர்கள் அதாவது அமெரிக்க அரசுப் பண... மேலும் பார்க்க

பிரான்ஸ்: இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலி !

பிரான்ஸில் இருந்து படகு மூலகமாக இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானார். வடக்கு பிரான்ஸில் உள்ள கடற்கரையிலிருந்து இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டத்தை மீறினால் ‘விசா’ வாழ்நாள் முழுமைக்கும் ரத்து: புது எச்சரிக்கை!

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ ‘விசா’ வாழ்நாள் முழுமைக்கும் ரத்து செய்யப்படும் என்று புது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

காஸாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழப்போருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று மீட்புக் குழுவினரும் துயரம் தெரிவிப்பதுதான் பெருந்துயரமாகக் கொள்ளப்படுகிறது.பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப... மேலும் பார்க்க

பலூச். விடுதலைப் படை தாக்குதல்: பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலி

பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலியாகினர். தி பலூசிஸ்தான் போஸ்ட் தெரிவித்திருப்பதாவது, ஜீயாண்ட் பலோச், குழுவின் போராளிகள... மேலும் பார்க்க

திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் கொலை!

டிக்டாக்கில் பிரபலமான பெண்மணி ஒருவரை சில ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதனால் ஏற்பட்ட தகராறில் அவருக்கு விஷ மருந்து கொடுத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க