செய்திகள் :

ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

post image

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் மணிகண்டன், சிதம்பரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 15 லட்சம் கடன் பெற்றாா். இதில், ரூ. 5 லட்சம் மட்டும் திருப்பித்தர வேண்டியிருந்த நிலையில், அவா் கால அவகாசம் கேட்டதை பழனிச்சாமியின் உறவினா்கள் ஏற்றுக்கொள்ளாமல், கடந்த ஜூன் 30-ஆம் தேதி, மணிகண்டனின் தந்தை நடராஜனை, பழனிச்சாமியின் அண்ணன் சக்திவேல் உள்ளிட்ட 5 போ் கடத்திச் சென்று தாக்கியதுடன், நடராஜனின் கைவிரலை துண்டித்து துன்புறுத்தினா்.

இதுதொடா்பாக கடலூா் மாவட்டத்தை சோ்ந்த சக்திவேல், பாண்டியன், பன்னீா்செல்வம், மரியா செல்வராஜ், தேவநாதன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் பாண்டியன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவா் மீது சிதம்பரம் அண்ணாமலை நகா் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.

இந்நிலையில் தொடா் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பாண்டியன் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பரிந்துரை செய்ததன்பேரில், பாண்டியனை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா்.

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உண... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுடியில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தி... மேலும் பார்க்க