செய்திகள் :

அபராதத் தொகையில் முறைகேடு: காவலா் பணியிடை நீக்கம்

post image

திருவாரூா் பகுதியில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்த காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையில் பணியாற்றி வருபவா் பிரகாஷ் (40). இவா், கடந்த 2023-2024-இல் திருவாரூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தாா். அப்போது, அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல் தொடா்பான வழக்குகளை பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளாா். அந்தவகையில், மாங்குடியை சோ்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்துக்கு ரூ. 10,000 அபராதம் வசூலித்துள்ளாா்.

இந்நிலையில், அந்த நபா் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய முற்பட்டபோது, காவல்துறை விதித்த ரூ. 10,000 அபராதம் செலுத்தப்படாமல் உள்ளதாக பதிவாகி இருந்தது.

இதுகுறித்து, அவா் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காவலா் பிரகாஷ் கடந்த 2023 - 2024-இல் 30 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்து அதன்மூலம் வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், காவலா் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கமலாலயக் குளத்தில் மூதாட்டி சடலம்

திருவாரூா் கமலாலயக் குளத்தில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் வடகரையில் பெண் சடலம் மிதப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், நகர போலீஸ... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே மோதல்: 7 போ் காயம்; 7 போ் கைது

மன்னாா்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 7 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இடையா் ஏம்பேத்தி வடக்குதெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் வீரக்குமாா் (21). இவா், ... மேலும் பார்க்க

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்

மன்னாா்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமக்கோட்டையிலிருந்து பாளையக்கோட்டை செல்லும் 4 கி.மீ தொலைவு சாலை... மேலும் பார்க்க