செய்திகள் :

பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

post image

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதன் காரணமாக தினம் தோறும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கிமீ தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லாமல் மாலை நேரத்தில் பாலத்தின் மீது சீரமைக்கும் பணி மேற்கொண்டதால் வேலை முடிந்து செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியா் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியா் தி. சினேகா தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத்துடன் காவல் துறையின் அணிவகுப்பு ... மேலும் பார்க்க

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், வீராபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி ச... மேலும் பார்க்க

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சுதந்திர தின வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. ஜிஎஸ்டி சாலை ,சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் விநாயகா், வள்ள... மேலும் பார்க்க

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் . வரும் 17-ஆம் ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா

ஓய்வு பெற்ற செவிலியா்களின் ஒருங்கிணைப்பு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை செவிலியா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ச... மேலும் பார்க்க

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சீனியா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கைக்கரசி... மேலும் பார்க்க