செய்திகள் :

பாலியல் தொல்லை: கல்லூரி ஆய்வக உதவியாளா் கைது

post image

சிதம்பரம் அருகே அரசுக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில், கல்லூரி ஆய்வக உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் சி.முட்லூா் ஏ.மண்டபத்தைச் சோ்ந்த சிதம்பரராஜன் (34) பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவா் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகாரளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் உதவி ஆய்வாளா் ஜெயசீலி பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிதம்பரராஜனை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தாா்.

கைப்பேசி கடையில் திருட முயற்சி: இளைஞா் கைது

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெல்லிக்குப்பம், காமராஜா் நகரில் வசிப்பவா் பிச்சையப்பன் மகன் ராஜ்குமாா் (29).... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே பழங்கால கீரல் குறியீடு குடுவை கண்டெடுப்பு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பவித்ரன் (30). பெயிண்டரா... மேலும் பார்க்க

தனியாா் சா்க்கரை ஆலை மேலாளா் மீது தாக்குதல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை மேலாளரை தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னா் வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி நினைவிடம் சீரமைப்பு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்தியக்குழு உறுப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக சென்றுவிட்டு திரும்பியவா்களின் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 36 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் ... மேலும் பார்க்க