செய்திகள் :

``பாலியல் புகார் கூறி ரூ.65 கோடி கேட்டு டிவி சேனலுக்கு மிரட்டல்..'' - 2 பேரை கைது செய்த போலீஸார்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஷாசியா நிஷார். இவர் அங்குள்ள தனியார் டிவி செய்தி சேனலில் தொகுப்பாளராக பணியற்றி பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். ஷாசியா நிஷாரும், மற்றொரு முன்னாள் பத்திரிகையாளரான ஆதர்ஷ் ஷா என்பவரும் சேர்ந்து ஷாசியா பணியாற்றிய தனியார் டிவி செய்தி சேனல் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

பெண் பத்திரிகையாளரான ஷாசியா நிஷார் போலி பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுப்போம் என்று கூறி மிரட்டி ரூ.5 கோடி கொடுக்கும்படி கேட்டனர். அதன் பிறகு அந்த தொகையை ரூ.65 கோடியாக அதிகரித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் டிவி சேனல் அதிகாரிகள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். ஷாசியா நிஷார் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளையும் அவர்கள் போலீஸில் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதோடு ஷாசியாவின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ரூ.34.50 லட்சம் பணம் இருந்தது. அதனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இரண்டு பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் வேறு எத்தனை பேரை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஷாசியா நிஷார் `பாரத் 24' என்ற டிவி சேனலில் வேலை செய்து வந்ததாகவும், அவர் வேலையில் சேர்ந்ததில் இருந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு எதிராக போலி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்போவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட டிவி நிர்வாக இயக்குநர் உள்பட 3 பேர் போலீஸில் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர்.

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க