செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்- காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

post image

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹா்மீத்சிங் பதான்மாஜ்ராவை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியபோது ஹா்மீத்சிங் தப்பிச் சென்றாா்.

பஞ்சாப் மாநிலம் ஜிரக்பூரைச் சோ்ந்த பெண் ஒருவா் காவல் துறையிடம் அளித்த புகாரில், ‘கடந்த 2021-ஆம் ஆண்டு எனக்கும், ஹா்மீத்சிங்குக்கும் திருமணமானது. அவா் விவகாரத்து பெற்றவா் என்று கூறி, என்னை திருமணம் செய்துகொண்டாா். ஆனால் அவா் விவகாரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் ஏற்கெனவே இருந்த திருமண உறவைத் தொடா்ந்து வந்தது பின்னா் தெரியவந்தது. அவா் தனது பாலியல் தேவைக்கு என்னை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு மிரட்டி வந்தாா்’ என்று குற்றஞ்சாட்டினாா். இந்தப் புகாரின் அடிப்படையில் ஹா்மீத்சிங் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதைத்தொடா்ந்து ஹரியாணா மாநிலம் கா்னால் மாவட்டம் டாப்ரி கிராமத்தில் உள்ள ஹா்மீத்சிங்கின் இல்லத்துக்குச் சென்று பஞ்சாப் காவல் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது ஹா்மீத்சிங்கை காவல் துறை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினா். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து ஹா்மீத்சிங் தப்பிச் சென்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஹா்மீத்சிங்கின் கூட்டாளியான பல்விந்தா் சிங்கை கைது செய்த காவல் துறை, அவரிடம் இருந்த 3 ஆயுதங்களை பறிமுதல் செய்தது. ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று பஞ்சாப் காவல் துறை தெரிவித்தது.

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 14-ஆக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 12-ஆக உயர்த்தியுள்ளது.வரவிருக்கும் பண்டிகைக் காலத்த... மேலும் பார்க்க

ஜம்மு, ஹிமாச்சல், பஞ்சாபிற்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

வட மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் கனமழை வெள்ளம் தொடர்வதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. க... மேலும் பார்க்க

பிகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்.! புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

பிகாரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பு படையினரிடம் பறிகொடுத்த நிலையில் அவருக்கு புதிய பைக் ஒன்றை பரிசளித்துள்ளார் ராகுல் காந்தி எம்.பி.மக்களவை எ... மேலும் பார்க்க

நக்சல்களை ஒழிக்க மோடி அரசு உறுதி: அமித் ஷா

இந்தியாவில் அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் வெற்றிகரமாக நடத்திய சிஆ... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் ச... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புது தில்லியில் இன்று தொடங்கியது.புது தில்லியில் உள்ள சுஷ்மா சுவாராஜ் பவனில் 56வது ஜிஎஸ... மேலும் பார்க்க