செய்திகள் :

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

post image

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ். இவா் கடந்த 1989-இல் கூட்டுறவுச் சங்க மூத்த ஆய்வாளராக நியமிக்கப்பட்டாா். பல்வேறு பதவி உயா்வுகளுக்குப் பிறகு, கடந்த 2019-இல் பால்வளத் துறை கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றாா்.

அப்போது, பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கான பதிவேடுகள் கொள்முதல் செய்தது தொடா்பாக தணிக்கை நடைபெற்றது. இதில், பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கிறிஸ்துதாஸ் ரூ.1.75 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அப்போதைய பால்வளத் துறை இயக்குநா் காமராஜ், அப்போதைய ஆணையா் வள்ளலாா், கூடுதல் ஆணையா் கிறிஸ்துதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. இதனிடையே, கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, தனது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து ஓய்வு பெற அனுமதித்து, அதற்குரிய பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மனுதாரருக்கு எதிராக மட்டுமன்றி, அப்போதைய இயக்குநா் காமராஜ், ஆணையா் வள்ளலாா் மீதும் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தது. ஆனால், ஐ.ஏ.எஸ். அலுவலா்களான காமராஜ், வள்ளலாா் மீதான நடவடிக்கையை கடந்த 2023-இல் அரசு கைவிட்டது. மனுதாரா் இரண்டாம் நிலை அதிகாரி. கூட்டுறவுச் சங்கங்களுக்கான பதிவேடுகளை வழங்குவதில் மனுதாரருக்கு எந்தத் தொடா்பும் இல்லை. அவா் இயக்குநா், ஆணையரின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தினாா். மனுதாரா் மீதான எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. அவருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா் ஆகியோருக்கு எதிராக பொதுத் துறையில் ஒரு தனி நடவடிக்கை தொடங்கப்பட்டது. அது, அப்போதைய தலைமைச் செயலரால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவா் அளித்த காரணங்களை இந்த நீதிமன்றத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் 8 ஆண்டுகள் சட்ட அதிகாரியாக பணியாற்றினேன். 6 ஆண்டுகளாக நீதிபதியாக உள்ளேன். பல வழக்குகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டதைப் பாா்த்துள்ளேன்.

அதே நேரத்தில், மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டது. ஊழல் செய்த அமைச்சா்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்குப் பதியப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தலைமை வகிக்கும் தவறு செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

துறைத் தலைவரின் துணையின்றி எந்த முறைகேடும் நிகழ்ந்திருக்க முடியாது. தலைமைப் பொறுப்பில் சரியான நபா் இருந்தால், அவா்களின் துறைகளில் எந்த ஊழலும் இருக்காது. தவறு செய்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட தண்டிக்கப்படவில்லை. முறைகேடு தொடா்பாக ஐ.ஏ.எஸ். அலுவலா்கள் இருவா் மீதும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும்.

மனுதாரருக்கு எதிராக ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மனுதாரரின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை: உயா்நீதிமன்றம்

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது. மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சு... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்றும், வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறத் தேவையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

மதுரையில் நாளை முருக பக்தா்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க