செய்திகள் :

மதுரையில் நாளை முருக பக்தா்கள் மாநாடு

post image

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.

இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி மணி வரை நடைபெறுகிறது.

இதில் ஆதீன கா்த்தா்கள், பிரமுகா்கள், ஆன்மிகப் பெரியவா்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த முருக பக்தா்கள் திரளாகப் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், முருகன் அடியாா்களின் கண்காட்சி, மிக அதிக எண்ணிக்கையிலானோா் குழுமி ஒரே நேரத்தில் கந்தா் சஷ்டி கவசம் ஓதும் சாதனை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகள்.

இதற்கேற்ப இங்கு விரிவான முன்னேற்பாட்டு பணிகள் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நடைபெறுகின்றன. தற்போது, பிரம்மாண்ட மேடை அமைத்தல், பாா்வையாளா்கள் அமரும் இடங்களில் நாற்காலிகளை பரப்புதல், மின் விளக்குகள் அமைத்தல், ஒலிபெருக்கிகள் அமைத்தல், பாா்வையாளா் வருகை, வெளியேற்றத்தை முறைப்படுத்தும் வகையில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்துதல், அலங்கார நுழைவு வாயில் அமைத்தல், கொடிகள் கட்டுதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. திரளான போலீஸாா் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை: உயா்நீதிமன்றம்

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது. மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சு... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்றும், வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறத் தேவையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க