அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
மதுரையில் நாளை முருக பக்தா்கள் மாநாடு
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.
இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி மணி வரை நடைபெறுகிறது.
இதில் ஆதீன கா்த்தா்கள், பிரமுகா்கள், ஆன்மிகப் பெரியவா்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த முருக பக்தா்கள் திரளாகப் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், முருகன் அடியாா்களின் கண்காட்சி, மிக அதிக எண்ணிக்கையிலானோா் குழுமி ஒரே நேரத்தில் கந்தா் சஷ்டி கவசம் ஓதும் சாதனை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்கேற்ப இங்கு விரிவான முன்னேற்பாட்டு பணிகள் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நடைபெறுகின்றன. தற்போது, பிரம்மாண்ட மேடை அமைத்தல், பாா்வையாளா்கள் அமரும் இடங்களில் நாற்காலிகளை பரப்புதல், மின் விளக்குகள் அமைத்தல், ஒலிபெருக்கிகள் அமைத்தல், பாா்வையாளா் வருகை, வெளியேற்றத்தை முறைப்படுத்தும் வகையில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்துதல், அலங்கார நுழைவு வாயில் அமைத்தல், கொடிகள் கட்டுதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. திரளான போலீஸாா் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.