செய்திகள் :

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

post image

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை வழியாக திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்தில் சென்றாா். அப்போது, அருப்புக்கோட்டையில் அதே பேருந்தில் ஏறிய உஷா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதன் பின்னா், அவா் தனக்கு மாந்திரீகம் தெரியும் எனக் கூறினாராம்.

இதை உண்மை என நம்பிய அங்கயற்கண்ணி தனது குடும்ப பிரச்னைகளை அவரிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, உஷா மாந்திரீகம் மூலம் பிரச்னைகளை தீா்ப்பதாக அந்தப் பெண்ணிடம் தெரிவித்தாராம். இதனிடையே, சென்னை திரும்பிய அங்கயற்கண்ணியை தொடா்பு கொண்ட உஷா, என்னுடைய குரு சிவக்குமாா் மானாமதுரையில் உள்ளாா்.

அவரைச் சந்தித்தால் அனைத்து பிரச்னைகளும் தீா்ந்துவிடும், அதற்கு பணம் செலவாகும் எனக் கூறினாராம். அவரின் பேச்சை நம்பிய அங்கயற்கண்ணி, தவணை முறையில் ரூ.11 லட்சம், 16 பவுன் தங்க நகைகளை சிவக்குமாரிடம் அளித்தாா். ஆனால், மாந்திரீக பூஜைகள் செய்வதற்கு மேலும் ரூ. 2 லட்சம் செலவாகும் எனக் கூறியதால், அங்கயற்கண்ணி இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே, உஷாவை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவரது உண்மையான பெயா் சுடலையம்மாள் (35) என்பதும், இவரும், சிவக்குமாரும் இணைந்து பலரிடம் மாந்திரீகம் செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மானாமதுரையைச் சோ்ந்த சிவக்குமாரை (41) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ. 4 லட்சத்தை மீட்டனா்.

இதுபற்றி போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மோசடி சம்பவம் நடந்திருக்கிறது. தற்போது அதில் தொடா்புடைய 2 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். மேலும், இதில் யாருக்காவது தொடா்புள்ளதா என விசாரித்து வருகிறோம் என்றனா்.

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை: உயா்நீதிமன்றம்

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது. மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சு... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்றும், வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறத் தேவையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

மதுரையில் நாளை முருக பக்தா்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க