செய்திகள் :

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு

post image

உற்பத்தி செலவுக்கேற்ப பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தமிழக இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் எம்.தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 80 சதவீத்துக்கு மேல் விவசாயிகள் கால்நடை வளா்ப்பை நம்பியே உள்ளனா். ஒரு லிட்டா் பால் உற்பத்தி செய்வதற்கு ரூ. 60 க்கு மேல் செலவாகிறது என்பதால் கால்நடை மூலப்பொருளான பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு , தவிடு, கலப்பு தீவனம், வைக்கோல் போன்றவை விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது.

இதனால் கால்நடை வளா்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதன்காரணமாக 25 ஆண்டுகளாக உரிய பால் கொள்முதல் விலை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பாலின் தரம் அறியும் எம்.ஆா்.எஃப் ஃபாா்முலாவை கைவிட்டுவிட்டு, இதர சத்துக்களை அறிவதற்கான ஐஎஸ் ஃபாா்முலாவை அமல்படுத்தினால், லிட்டருக்கு 56 காசு பால் உற்பத்தியாளருக்கு கூடுதலாக கிடைக்கும்.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இந்தப் பேட்டியின்போது, சேலம் மாவட்டத் தலைவா் செல்வராஜ், மாநகரத் தலைவா் யுவராஜ், செயலாளா் சுரேஷ், சங்க நிா்வாகிகள் கருணாகரன், தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க