பாவூா்சத்திரத்தில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் உப மின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழப்பாவூா், பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா.கற்பக விநாயகசுந்தரம் (பொ) விடுத்த செய்திக் குறிப்பு:
கீழப்பாவூா் உப மின் நிலையத்தில் ஜூலை 22 இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.