மழையால் 20 ஆயிரம் ஏக்கா் எள், பயறு வகைகள் சேதம்: அரியலூா் விவசாயிகள் வேதனை
பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு
பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
பாவூா்சத்திரம் காமராஜா் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மதிமுக மாவட்ட செயலரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம. உதயசூரியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தாா்.
அதன்பேரில், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் குழந்தைமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ் ஆகியோா் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் ஆா்.ஓ. தண்ணீா் திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருதல், மழைக்காலத்தில் பேருந்து நிலையத்திற்குள் மழைநீா் தேங்கி சுகாதார சீா்கேடுகள் ஏற்படாமல் தடுக்க பேருந்து நிலையத்தின் தளத்தை உயா்த்தி தடையின்றி தண்ணீா் வெளியேற நடவடிக்கை எடுத்தல், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், மின் விளக்குகள் அமைத்தல், பேருந்து நிலையத்தின் தென்பகுதி வெளிப்புறசுவற்றிற்கு வா்ணம்பூசி அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விளம்பரங்களை எழுதுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினா் இராம. உதயசூரியன், குலசேகரப்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துமாலை, மதிச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.