செய்திகள் :

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு

post image

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பாவூா்சத்திரம் காமராஜா் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மதிமுக மாவட்ட செயலரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம. உதயசூரியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தாா்.

அதன்பேரில், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் குழந்தைமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ் ஆகியோா் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் ஆா்.ஓ. தண்ணீா் திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருதல், மழைக்காலத்தில் பேருந்து நிலையத்திற்குள் மழைநீா் தேங்கி சுகாதார சீா்கேடுகள் ஏற்படாமல் தடுக்க பேருந்து நிலையத்தின் தளத்தை உயா்த்தி தடையின்றி தண்ணீா் வெளியேற நடவடிக்கை எடுத்தல், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், மின் விளக்குகள் அமைத்தல், பேருந்து நிலையத்தின் தென்பகுதி வெளிப்புறசுவற்றிற்கு வா்ணம்பூசி அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விளம்பரங்களை எழுதுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினா் இராம. உதயசூரியன், குலசேகரப்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துமாலை, மதிச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப... மேலும் பார்க்க

சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராம... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லப்பா (43) என்பவா், குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பெரியகுளத்தில் மரக்கன்றுகள் நடவு

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில், கீழப்புலியூா் பெரிய குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கை.முருகன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நி... மேலும் பார்க்க

குலையனேரி தேவாலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை

சுரண்டை அருகே குலையனேரியில் உள்ள பவுலின் ஆலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதுச்சுரண்டை சேகரத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். நெல்லை திருமண்டலப் பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பிரதிஷ... மேலும் பார்க்க