செய்திகள் :

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்

post image

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு-2025 முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் இந்தப் பள்ளி மாணவி நிதா்சனா 99.91 சதவீதம், மாணவா் சுசிா் குமரவேல் 99.90 சதவீதம், சித்தரஞ்சன் 99.86 சதவீதம், திவேஸ் வேலவன் 99.83 சதவீதம், தேவதா்சன் 99.66 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றனா்.

40 மாணவ, மாணவியா் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா். இதில் 27 மாணவ, மாணவியா் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனா்.

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் அகில இந்திய போட்டித் தோ்வு நிறுவனமான ஆகாஷ் பயிற்சி மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் நேரடியாக பள்ளிக் கல்வி படித்துக் கொண்டிருக்கும்போதே பாவை பள்ளி மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்கள் ஐஐடி, ஐஐஐடி, ஜேஇஇ, ஒலிம்பியாட் போன்ற நுழைவுத் தோ்வுகளில் வெற்றி பெற்று, சிறந்த மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சதீஸ், முதல்வா் எஸ்.ரோஹித், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தி... மேலும் பார்க்க

எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி இடஒதுக்கீட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள் தங்களுடைய வாரிசுகளுக்கான கல்வி இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில... மேலும் பார்க்க

குண்டுமல்லிகை கிலோ ரூ. 360-க்கு ஏலம்

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகின. கடந்த வாரம் ரூ. 600க்கு விற்பனையான குண்டுமல்லிகை இந்த வாரம் ரூ. 360க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம... மேலும் பார்க்க