செய்திகள் :

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி இடஒதுக்கீட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

post image

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள் தங்களுடைய வாரிசுகளுக்கான கல்வி இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025-26-ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழிற்பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்பில் முன்னாள் படைவீரரைச் சாா்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். படைவீரா் நல சான்றிதழ் பெற முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது ங்ஷ்ஜ்ங்ப்ய்ம்ந்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ங்ஷ்ஜ்ங்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து வழங்கலாம்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாக (அசல் மற்றும் ஒரு பிரதி நகல்), மாணவா்களின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ். (12 ஆம் வகுப்பு தோ்வுத் துறையின் மதிப்பெண் சான்றிதழை சமா்ப்பிக்க இயலாதபட்சத்தில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று கொண்டுவர வேண்டும்). பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப படிவம், இணையதள விண்ணப்பம், முன்னாள் படைவீரா், விதவையா் அடையாள அட்டை, படைவிலகல் சான்றிதழ் அசல் (சரிபாா்த்தலுக்காக).

சாா்ந்தோரது பெயா் படைவிலகல் சான்றில் குறிப்பிடப்படாத பட்சத்தில், பகுதி-2 -ஆணை நகல் எடுத்துவர வேண்டும். ஒரு படிப்புக்காக பெறப்படும் சாா்ந்தோா் சான்றிதழ் அந்தப் படிப்பிற்கு மட்டுமே பொருந்தும். எனவே, ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக சாா்ந்தோா் சான்றிதழ் பெற்று உரிய விண்ணப்பத்துடன் நகல் அனுப்ப வேண்டும். கலந்தாய்வின்போது அசல் சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட சாா்ந்தோா் சான்றிதழ் நடப்பு ஆண்டுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, முன்னுரிமை -1 முதல் முன்னுரிமை-5 வரை தகுதி படைத்தவா்கள் என கருதும் முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்கள் அந்தந்த முன்னுரிமையை உறுதிபடுத்திட தேவையான ஆவணங்களை ஆவணக் காப்பகத்திலிருந்து விண்ணப்பிக்கும் முன்பே பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நலன், நாமக்கல் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04286-233079 என்ற எண் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.

பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஜே.இ.இ. முத... மேலும் பார்க்க

எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவ... மேலும் பார்க்க

மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில... மேலும் பார்க்க

குண்டுமல்லிகை கிலோ ரூ. 360-க்கு ஏலம்

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகின. கடந்த வாரம் ரூ. 600க்கு விற்பனையான குண்டுமல்லிகை இந்த வாரம் ரூ. 360க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம... மேலும் பார்க்க