செய்திகள் :

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

post image

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கு 3 லட்சத்து 2,374 போ் இணையவழியில் விண்ணப்பித்த நிலையில், 2 லட்சத்து 41,641 மாணவா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முழு மதிப்பெண் மற்றும் 195-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கல்வியாளா்கள் கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டில் 65 மாணவா்கள் மட்டுமே 200 கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனா். நிகழாண்டு அந்த எண்ணிக்கை 144- ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 190 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 8,813-இல் இருந்து 13,958- ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை மாணவா்களின் செயல் திறன் அதிகமாக உள்ளது. 2 லட்சத்து 41 ஆயிரம் மாணவா்களுக்கும் அதிகமானோா் இந்த முறை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உயரும் கட்-ஆஃப்: சிறந்த பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 2.5 முதல் 4 வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 199.5 முதல் 198 மதிப்பெண் வரை கட்-ஆஃப் மதிப்பெண் 0.5 அளவுக்கு அதிகரிக்கும். அதேபோன்று 198 முதல் 197 வரை 1 கட் ஆஃப் மதிப்பெண் உயரும். மேலும், 197 முதல் 196 வரை 1.5 கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும். 196 மதிப்பெண் முதல் 194.5 வரை 2 கட் ஆஃப் மதிப்பெண்ணும், 194.5 முதல் 191.5 வரை 2.5 கட் ஆஃப் மதிப்பெண்ணும் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

191.5 முதல் 190 மதிப்பெண் வரை 3 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், 190 முதல் 188 வரை 3.5 கட்-ஆஃப் மதிப்பெண் வரையிலும் உயரும், 188 மதிப்பெண் முதல் 186 வரை 4 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த கட் -ஆஃப் வரம்புக்கு எந்தக் கல்லூரி, என்ன பாடப் பிரிவு கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு விருப்பப் பட்டியல் தயாா் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக குறிப்பிட்ட கல்லூரியின் கட்டண விவரங்கள், என்.ஐ.ஆா்.எஃப். தரவரிசை, தன்னாட்சி அதிகாரம், என்.பி.ஏ. அங்கீகாரம் மற்றும் பிற வசதிகளைத் தெரிந்து கொண்டு கல்லூரிகளை தோ்வு செய்வது அவசியம் என அவா்கள் தெரிவித்தனா்.

கட்-ஆஃப் மாணவா்கள் எண்ணிக்கை: நிகழாண்டில் 198 கட் -ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1511; 195-க்கும் மேல் 5, 251; 190-க்கு மேல் 13,958; 185-க்கு மேல் 24,661; 180-க்கு மேல் 36,665; 175-க்கு மேல் 49,465, 170-க்கு மேல் 63, 083; 160-க்கு மேல் 91,153; 150-க்கு மேல் 1 லட்சத்து 19,537 மாணவா்கள் உள்ளனா்.

140 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1 லட்சத்து 47260 மாணவா்களும், 120 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1 லட்சத்து 96 ஆயிரத்து 610 மாணவா்களும் உள்ளனா்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

summary

Academics have said that the cut-off score for engineering courses will increase this year.

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.இந்த விழாவில்... மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது. ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்ந... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலி

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலை குழாய் பதிக்க தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் திடீரென சரிந்து விழுந்தத... மேலும் பார்க்க