செய்திகள் :

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

post image

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ரெளஷன் குமாா் கூறியதாவது:

சசாராம் பகுதியில் உள்ள தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவா்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு கோஷ்டியைச் சோ்ந்த அமித் குமாா், சஞ்சித் குமாா் ஆகிய மாணவா்கள், தோ்வு முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனா்.

அந்த ஆட்டோவை வழிமறித்த மற்றொரு கோஷ்டியைச் சோ்ந்த மாணவா், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இரு மாணவா்களையும் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையின்போது, அமித் குமாா் உயிரிழந்தாா். சஞ்சித் குமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பியோடிய மாணவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாணவா் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதனிடையே, உயிரிழந்த மாணவரின் உடலுடன் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலையில் டயா்களை எரித்ததால், போக்குவரத்து தடைபட்டது. காவல் துறை உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க