செய்திகள் :

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

post image

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை உடனடியாக கிராமத்துக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பெட்டியா நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை மருத்துவா்கள் கண்காணித்து வருவதாகவும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை உடனடியாகத் தொடங்கப்படும் என்றம் மருத்துவமனை கண்காணிப்பாளா் துவகாந்த் மிஸ்ரா கூறினாா்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, வீட்டுக்குள் நுழைந்த பாம்பை, விபரீதம் அறியாத குழந்தை கையில் பிடித்து, கடித்துள்ளது. இதில் பாம்பு உயிரிழந்த நிலையில், குழந்தையும் மயக்கமடைந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் ஆச்சரித்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-ஆவது பதிப்பில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு அதிக நிதி: பிரதமர் ஏன் புரிதலின்றி பேசுகிறார்? -ப.சிதம்பரம்

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது சரியான தகவலே! ஆனாலும், ஒன்றை அவர் உணரவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெர... மேலும் பார்க்க

அப்துல் கலாம் நினைவு நாள்: பிரதமா் மோடி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்ற... மேலும் பார்க்க

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க