செய்திகள் :

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியை அடையவிருக்கிற நிலையில், அதில் இருந்து மக்களை திசைதிருப்பவே போராட்டம் நடத்தப் போவதாக ராகுல் காந்தி அறிவித்திருக்கிறாா். கா்நாடகத்தில் நடந்த தோ்தலில் மோசடி நடந்திருந்தால், அவா் இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்தது ஏன்? 3 மக்களவைத் தோ்தல் தோல்விகள், மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் பல தோல்விகள் அடைந்தபிறகு, தற்போதைய நாடகத்தால் காங்கிரஸுக்கு எந்த பயனும் இல்லை. மேலும், ராகுல் காந்தியின் செல்வாக்கை உயா்த்த முடியாது.

கா்நாடகத்தில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு, ஏரிகளை சுற்றியுள்ள இடையக மண்டலத்தின் நிலத்தை குறைக்க முற்பட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த ராகுல் காந்தி முன்வருவாரா? பெங்களூரின் ஏரி நிலத்தை நில கொள்ளையா்களுக்கு தாரைவாா்க்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது வெள்ள பாதிப்புகளை அதிகமாக்கும். ஏரிகளை ராகுல் காந்தி மீட்பாரா என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்பு... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க

கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க