செய்திகள் :

பிக்-பாஸ் தொடரில் விளையாட பதிவு செய்த இந்திய வீரர்!

post image

ஆஸ்திரேலியாவில் பிரபலமான லீக் தொடரான பிக்-பாஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரும் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போலவே உலகம் முழுவதும் பல்வேறு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் லீக் உலகெங்கும் மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த 15 பெண் வீராங்கனைகள் உள்பட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌலும் பதிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சித்தார்த், இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், பல்வேறு டி20-களிலும் விளையாடியிருக்கிறார். பிக்-பாக் அணிகளில் இவர் தேர்தெடுக்கப்பட்டால், பிபிஎல்லில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.

இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தத் தொடருக்கான அணிகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஒருவேளை 43 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடும் பட்சத்தில் அவர், பிக்பாஸ் தொடரில் விளையாடிய மிகவும் வயதான வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.

இந்திய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே, ராதா யாதவ் மற்றும் யஸ்திகா பாட்டியா ஆகியோர் ஏற்கனவே பிபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர்.

அவர்களைத் தவிர்த்து எஸ். மேக்னா, அருந்ததி ரெட்டி, பிரதிகா ராவல், 19-வயதுக்குள்பட்ட டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் நிகி பிரசாத், உமா சேத்ரி, காஷ்வி கௌதம், பிரியா மிஸ்ரா, இன்னும் சிலரும் 15 பேர் கொண்ட பட்டியலில் உள்ளனர்.

இதையும் படிக்க | ஜோக்கர்ஸ் யாரு..? சீண்டிய ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா!

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்: ஷர்துல் தாக்குர்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் ... மேலும் பார்க்க

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை நிராகரித்த பும்ரா..! என்ன நடந்தது?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தான் நிராகரித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி விலகியதால் புதிய... மேலும் பார்க்க

சிங்கத்தின் குகைக்குள் செல்லும் ஷுப்மன் கில்; தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு மரியாதை..! வங்கதேச வீரர்கள் இருவர் சதம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஓய்வுபெறவிருக்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.இலங்கை காலே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதல்... மேலும் பார்க்க

மூன்று சூப்பர் ஓவர்கள்; டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் நேற்... மேலும் பார்க்க

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது. 27 ஆண்... மேலும் பார்க்க