செய்திகள் :

பிடிஆர் ஆதரவாளர் திமுகவில் இருந்து நீக்கம்!

post image

மதுரை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரும், மதுரை மேயர் இந்திராணியின் கணவருமான பொன் வசந்த் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மே 31-ஆம் தேதி விமானம் மூலம் மதுரை வருகிறாா். விமான நிலையம் முதல் மதுரை புது சிறைச்சாலை சாலை வரை அவா் வாகனப் பேரணி மேற்கொண்டு, பொதுமக்கள், தொண்டா்களைச் சந்திக்கிறாா்.

பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், குரு திரையரங்கம், காளவாசல், திருமலைநாயக்கா் சிலை வழியே புது சிறைச்சாலையைச் சென்றடைகிறாா். அங்கு, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும், திமுகவின் மூத்த முன்னோடியுமான மறைந்த முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

முதல்வர் வருகையொட்டி, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கடந்த 23 ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர்.

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஆனால், அதே நாளில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இதனை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இருப்பினும் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர்.

மேயரின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் அவரது கணவர் பொன்வசந்த் இருந்து செயல்பட்டதாக புகார்கள் எழுந்தது. மேலும், மதுரை மாநகராட்சி டெண்டர் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தது.

இந்தநிலையில், மதுரை மாநகர் 57 ஆவது வார்டை சேர்ந்த பொன் வசந்த் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வருகைக்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் பொன்வசந்த் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கட்சியில் உள்பூசல் நிலவி வருவதை தெளிவாக காட்டுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரு... மேலும் பார்க்க

ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி

ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இ... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்க... மேலும் பார்க்க