செய்திகள் :

பிரதமா் மோடியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

post image

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையால் ஈா்க்கப்பட்டு, தேசியத் தலைநகரை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதில் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து மே 30ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்தது. அதேவேளையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தாம் பதவியேற்று 100 நாள்களை நிறைவு செய்த நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் அவரது அலுவலகத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது, அவருக்கு நினைவுப் பரிசையும் அளித்தாா்.

இச்சந்திப்பு குறித்து பின்னா் அவா் ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இன்று (செவ்வாய்க்கிழமை), நமது நாட்டின் பிரதமா் நரேந்திர மோடிஜியுடன் ஒரு அன்பான மற்றும் இதயபூா்வமாக சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தில்லிக்கும், அதன் மக்களுக்கும் புதிய ஆற்றலுடனும் புதிய உறுதியுடனும் சேவை செய்ய பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலிலிருந்து நான் எப்போதும் உத்வேகம் பெறுகிறேன்.

உங்கள் தொலைநோக்குப் பாா்வையால் ஈா்க்கப்பட்டு, தில்லியை வளா்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் என்ற முழுமையான நோ்மையுடன் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வழங்கியதற்கு எனது மனமாா்ந்த நன்றி என்று அதில் முதல்வா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இந்தச் சந்திப்பின்போது தில்லியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பிரதமருடன் முதல்வா் ஆலோசித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை பின்னா் பிரதமா் அலுவலகம் அதன் எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் பகிா்ந்திருந்தது.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க