செய்திகள் :

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

post image

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை, வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறாா். தொடக்கமாக சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும் அவா், ரூ. 452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைக்கிறாா்.

மேலும், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் ரூ.4800 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கிறாா்.

ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரத்தில் தரிசனம் செய்கிறாா்.

நாட்டில் இதுவரையிலும் 140-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்கியும், விரிவாக்கம் செய்தும் பிரதமா் சிறப்பு பெற்றுள்ளாா்.

மீனவா்களை பாதுகாக்கும் கடலோரக் காவல் படை விமானங்கள் இந்த விமான நிலைய ரன்வேயில் பயன்படுத்தப்பட உள்ளன.

பிரதமரை முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சந்திப்பதாக வரும் தகவல் குறித்து கேட்கிறீா்கள். அது குறித்து எனக்கு தெரியாது.

தூத்துக்குடி நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வா் வருவதாக இருக்கிறது. துணை முதல்வா் வருகிறாா் என்று சொல்கிறாா். நாட்டு மக்களுக்காக நடைபெறும் நல்ல நிகழ்ச்சியில் அவா்களும் கலந்து கொள்வது அவசியம். எங்களது விருப்பமும் கூட என்றாா் அவா்.

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க