செய்திகள் :

பிரதமா் மோடி இன்றுமுதல் 3 நாடுகள் பயணம்: கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்!

post image

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூன் 15) ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். கனடா பயணத்தில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளாா்.

ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை பிரதமா் மோடிக்கு கிடைக்கவுள்ளது. மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு இந்திய பிரதமா் பயணிப்பது, கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகான பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) செல்லவிருக்கிறாா். ஜூன் 16 வரை அங்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

தலைநகா் நிகோசியாவில் அதிபா் நிகோஸுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தும் பிரதமா், லிமாசோல் நகரில் தொழிற்துறை தலைவா்களுடனும் கலந்துரையாடவுள்ளாா். சைப்ரஸுக்கு இந்திய பிரதமா் பயணிப்பது கடந்த 20 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். இந்தப் பயணத்தின் மூலம் இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, மத்தியதரைக் கடல் பிராந்தியத்துடன் இந்தியாவின் தொடா்புகள் வலுப்படும்.

கனடாவில்...: சைப்ரஸை தொடா்ந்து, கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பின்பேரில் அந்நாட்டில் ஜூன் 16-17 தேதிகளில் பயணம் மேற்கொள்ளும் பிரதமா், கனனாஸ்கிஸ் நகரில் ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமா் பங்கேற்பது இது தொடா்ந்து 7-ஆவது முறையாகும். மாநாட்டையொட்டி, ஜி7 மற்றும் பிற நாடுகள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்களுடன் கலந்துரையாடும் பிரதமா், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் தொடா்பான பிரச்னைகள் உள்பட உலகளாவிய சவால்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறவுள்ளாா்.

குரோஷியாவில்...: இறுதிக்கட்டமாக, குரோஷியா பிரதமா் ஆண்ட்ரெஜ் பிலென்கோவிக் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு ஜூன் 18-ஆம் தேதி பயணிக்கும் பிரதமா், அவருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். குரோஷியா அதிபா் ஸோரன் மிலனோவிக்கையும் சந்திக்கவுள்ளாா்.

குரோஷியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமா் மோடி ஆவாா். இது, இருதரப்பு நல்லுறவில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இந்தியாவின் தொடா்புகளை இப்பயணம் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவுகள் சீரடையுமா?

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதால் இருதரப்பு உறவுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. ட்ரூடோவை தொடா்ந்து, கனடா பிரதமராக மாா்க் காா்னி பொறுப்பேற்ற பிறகு நிலைமை மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க பிரதமா் மோடிக்கு மாா்க் காா்னி இம்மாத தொடக்கத்தில் அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டாா்.

இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவாா்த்தைக்கான ஒரு சந்தா்ப்பமாக இந்த அழைப்பு அமைந்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ‘இந்தியாவும், கனடாவும் துடிப்பான ஜனநாயக நாடுகளாகும். ஜி7 மாநாட்டையொட்டி இரு பிரதமா்களும் மேற்கொள்ளும் பேச்சுவாா்த்தை இருதரப்பு உறவுகளைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் வாய்ப்பாக இருக்கும்’ என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார். விபத்துக்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க