செய்திகள் :

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

post image

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்றனர். நீனா நானா நிகழ்ச்சி டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் 18 ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அவர் பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி, குறிப்பிட்ட விவகாரத்தை முன்வைத்து அதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு வேறு மக்கள் விவாதம் செய்யும் நிகழ்ச்சியாக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறும்.

இந்த வாரம் சண்டைக்கோழிகளாக இருக்கும் கணவன்கள், மனைவிகள் என்றத் தலைப்பை முன்வைத்து நீயா நானா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 27) பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தலைவன் தலைவி படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவர்கள் பங்கேற்றுள்ளதால், விஜய் சேதுபதி, நித்யா மேனன், பாண்டிராஜ் கூறும் கருத்துகளைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: பாக்கியலட்சுமி தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

Vijay Sethupathi and Nithya Menon participated as special guests in the popular small screen show.

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர... மேலும் பார்க்க

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உ... மேலும் பார்க்க

முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

ராணிப்பேட்டையில் விசிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக சார்பில் மதச்சார்பி... மேலும் பார்க்க

பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வரு... மேலும் பார்க்க

பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்புதமிழ்நாடு அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் க... மேலும் பார்க்க