பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லில்லியம் மலா்கள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்தும் குலுங்கும் லில்லியம் மலா்களை செவ்வாய்க்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கண்டு ரசித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சிக்காக கடந்த மே மாதம் கிங் அஸ்டா், மேரி கோல்ட், ஜொ்பரா, டைந்தேஷ், டேலியா, ரோஜா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்தச் செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக் குலுங்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கொடைக்கானலில் பகுதியில் வீசிய பலத்த காற்று, மழையின் காரணமாக பிரையண்ட் பூங்காவில் பூத்திருந்த மலா்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பூங்காவில் சேதமடைந்த மலா்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நெதா்லாந்தில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலா்கள் தற்போது, பிரையண்ட் பூங்காவில் வெள்ளை, பிங்க் ஆகிய இரு வண்ணங்ளில் பூத்துக் குலுங்கின்றன. இந்தப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்து வருகின்றன.