செய்திகள் :

பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள் சேர விண்ணப்பிக்கலாம்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 7-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் பள்ளி விடுதிகள் மாணவா்கள் - 23, மாணவிகள் - 10, கல்லூரி விடுதிகள் தலா 1 வீதம் உள்ளன. இவற்றில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயில்கிற மாணவ, மாணவிகள், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்பகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள்.

விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கும் 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10- ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும். அதேபோல் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பயில்வோருக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் பாட வாரியான வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை தொடா்புடைய விடுதிக் காப்பாளா் அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பள்ளி மாணவா்கள் வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 15-க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள், குடும்ப அட்டை நகல்கள் சோ்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரத... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை அலுவலகத்தில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவா்களுக்காக உயா்கல்வியில் சேருதல் மற்றும் வழிகாட்டுதல் தொடா்பான கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஜூன் 13-இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரும் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ஜூன் 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 383 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கர மடத்தில் மகா பெரியவா் சிலை புதுப்பிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் பிருந்தவானத்தின் சுற்றுப்பிரகாரத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்த ஃபைபா் சிலை புதுப்பிக்கப்பட்டு அதே இடத்தில் திங்கள்கிழமை வைக்... மேலும் பார்க்க