விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர் எத்தனை பேர்? ஏர் இந்தியா தகவல்!
காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 3 நாள்களும் 40-க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னா்கள் வேத பாராயணம் பாடும் நிகழ்வு நிறைவு பெற்றதையொட்டி அவா்களுக்கு ஸ்ரீ மடத்தின் சாா்பில் புத்தாடை, வெகுமதி வழங்கப்பட்டது.
காலையில் பஜனை மற்றும் ஸ்ரீமடத்தின் சுவாசினிகள் 108 போ் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனா். அதிக வருமானம் இல்லாத கிராமக்கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள் உள்ளிட்ட 514 பேருக்கு சன்மானம் மற்றும் புத்தாடைகளை மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வழங்கினாா். இவா்களில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரும் கெளரவிக்கப்பட்டனா்.
தேனம்பாக்கம் மகா சுவாமிகள் வித்யா பீடம் சாா்பில் ஏகாதச ருத்ர ஹோமம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று பிருந்தாவனத்தில் மகா பெரியவா் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெற்றது. மகா பெரியவா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
சங்கரா பல்கலை. சாா்பில் மருத்துவா் சாய்நாதன் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி ஜீவானந்தம் தலைமையில் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் தங்கத்தேரில் மகா பெரியவா் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து பவனி வந்தது. மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா. விஸ்வாநாத சாஸ்திரி, மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.