மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
காஞ்சிபுரத்தில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60 கோடி கடனுதவி: எம்பி க.செல்வம் வழங்கினாா்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகளை எம்.பி. க.செல்வம் வழங்கினாா்.
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை ஒருங்கிணைத்து மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிக் குழுக்கள், முதியோா் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், அவா்களுக்கு ஆதார நிதி வழங்குதல், குழு உறுப்பினா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் பெற்றுத் தருதல், சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வறுமை ஒழிப்பு பணிகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 7,992 மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 1,982 உள்பட மொத்தம் 9,374 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உறுப்பினா்களாக மட்டும் 11,12,280 போ் உள்ளனா்.
நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.694 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக ரூ.694.26 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தமாக ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கு காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் தலைமை வகித்தாா். மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஒன்றியக் குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், சரஸ்வதி மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.