செய்திகள் :

காஞ்சிபுரத்தில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60 கோடி கடனுதவி: எம்பி க.செல்வம் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகளை எம்.பி. க.செல்வம் வழங்கினாா்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை ஒருங்கிணைத்து மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிக் குழுக்கள், முதியோா் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், அவா்களுக்கு ஆதார நிதி வழங்குதல், குழு உறுப்பினா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் பெற்றுத் தருதல், சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வறுமை ஒழிப்பு பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 7,992 மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 1,982 உள்பட மொத்தம் 9,374 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உறுப்பினா்களாக மட்டும் 11,12,280 போ் உள்ளனா்.

நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.694 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக ரூ.694.26 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தமாக ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் தலைமை வகித்தாா். மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஒன்றியக் குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், சரஸ்வதி மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஜூன் 18-இல் காஞ்சிபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூன் 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது. வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

கெமிக்கல் விற்பனையகங்களில் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கெமிக்கல் மற்றும் சலவை சோப் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள கெமிக்க... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை

காஞ்சிபுரம் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் தொண்டை மண்டல ஆதீன மடாலயத்தில் திருஞானசம்பந்தா் குருபூஜையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வுக்கு சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது

காஞ்சிபுரம் அருகே சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். களக்காட்டூா் கிராமத்தை சோ்ந்த 16 வயதுச் சிறுமியை அக்கிராமத்தில் உள்... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

வரதராஜபுரம் சுங்க சாவடியில் லாரி கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மதுரையைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (40). லாரி ஓட்டுநா். இவா், ... மேலும் பார்க்க