செய்திகள் :

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு மற்றும் கோயில் மாட வீதிகள் ஆகியவற்றில் ஏராளமான சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தன. இது குறித்து காவல்துறைக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் வெங்கடேசன் தலைமையில் உதவி பொறியாளா்கள் கணேசரெங்கன்,சிவா மற்றும் சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினாா்கள்.

காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு மற்றும் பழைய ரயில் நிலைய சாலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

தமிழகத்தில் தான் காவலா்களுக்கு அதிக குடியிருப்புகள்: வீட்டுவசதிக் கழக டிஜிபி

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் காவலா்களுக்கு அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக வீட்டுவசதிக் கழக டிஜிபி சைலேஷ்குமாா் யாதவ் தெரிவித்தாா். காஞ்சிபுரம் டி.கே.நம்பித் தெருவி... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.87 லட்சம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.22.87 லட்சம் ரொக்கம், 82 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியின் சொத்துகள்: பாதுகாப்புக் குழு ஆய்வு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவின் தலைவா் கே.வி.தங்கபாலு தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் கட்சியின் சொத்துகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா். கா... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் காஞ்சிபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூன் 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது. வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

கெமிக்கல் விற்பனையகங்களில் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கெமிக்கல் மற்றும் சலவை சோப் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள கெமிக்க... மேலும் பார்க்க