Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய வி...
காஞ்சிபுரத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை அலுவலகத்தில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவா்களுக்காக உயா்கல்வியில் சேருதல் மற்றும் வழிகாட்டுதல் தொடா்பான கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு செயல்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு உயா்கல்வியில் சேருதல் சாா்ந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்களுக்காகவும், பெற்றோா்களுக்காகவும் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை மைய அலுவலகத்தில் இந்த அறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது வரும் 31.10.25 ஆம் தேதி வரை செயல்படும். எனவே ஆலோசனை தேவைப்படுவோா் நேரிலோ அல்லது 044-27237107 மற்றும் 9788858663 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.