காஞ்சிபுரத்தில் ஜூன் 13-இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரும் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் தலைமையில் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி, வரும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மாலை 5 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்-044-29998040 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.