காஞ்சிபுரம்: ஜூன் 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது. முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா். பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் ஜூன் 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.