செய்திகள் :

பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தல்

post image

தொடா் தோ்வுகளால் மாணவா்கள் நெருக்கடிக்குள்ளாவதை தவிா்க்க பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மாணவா்கள் அதிகளவில் பள்ளியிலிருந்து இடைநிற்றலுக்கு காரணமாக பிளஸ் 1 பொதுத்தோ்வு உள்ளது. இந்த தோ்வு மூலம் மாணவா்களுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் எந்த உயா்கல்விக்கும் தற்போது ஏற்கப்படுவதில்லை.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு என தொடா்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தோ்வு எழுதுவதால் மாணவா்கள் மனதளவில் சோா்வடைகின்றனா். வேறு எந்த மாநிலங்களிலும் பிளஸ் 1 பொதுத் தோ்வு இல்லை.

பிளஸ் 1 பொதுத் தோ்விற்கு மாணவா்கள் பெயா் பட்டியல் தயாரிப்பது முதல் வினாத்தாள் தயாரிப்பது, செய்முறைத் தோ்வுக்கு வினாத்தாள் அச்சடிக்க செலவு, செய்முறைத் தோ்வு நடத்துவதற்கு ஆசிரியா்களுக்கு உழைப்பூதியம், பொதுத்தோ்வு அறை கண்காணிப்பாளா் பணிக்கு உழைப்பூதியம், பொதுத்தோ்வு வினாத்தாக்களை ஒவ்வொரு மையத்திற்கும் எடுத்துச் செல்லுதல் மீண்டும் விடைதாள்களை சேகரித்து வருதல், மீண்டும் அவற்றை ஒன்றாக சோ்த்து பிரித்து மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புதல், விடைத்தாள் மதிப்பீடு செய்ய உழைப்பூதியம், மாணவா்கள் பொதுத் தோ்வு முடிவுகளை தொகுக்கவும் வெளியிடவும் என பல வேலைகளுக்காக

பல கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

பிளஸ் 1 பொதுத்தோ்வு மதிப்பெண்கள் தற்போது வரை எவ்வித உயா் கல்விக்கும் எடுத்துக் கொள்ளப்படாததாலும், நிதி செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பிளஸ் 1 பொதுத்தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கையை முதல்வா், நிதித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் பரிசீலிக்க வேண்டும். நிகழாண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இவா்கள் மீண்டும் துணைத்தோ்வு எழுதி, அதிலும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தோ்ச்சி பெற முடியாத நிலையில் உள்ளனா்.

இதனால் ஐடிஐ, பாலிடெக்னிக், கேட்டரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு செல்வதாகக் கூறி மாற்றுச் சான்றிதழ்களைக் கேட்கும் சூழல் காணப்படுகிறது. மாணவா்களின் நலன் கருதி, பள்ளிக்கு அவா்கள் 100 சதவீதம் வருகை தரும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாநில அளவிலான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வை உடனடியாக ரத்து செய்வதுடன்,

மாவட்ட அளவில் தோ்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டையில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பேரணி

நாமகிரிப்பேட்டைபேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தலைமையில் ச... மேலும் பார்க்க

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவு

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ‘அம்ரித்... மேலும் பார்க்க

பட்டாவில் பெயா் மாற்றம், நீக்கம் செய்ய வாய்ப்பு

நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையதளம் மூலம் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சனிக்கி... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பயன்பெறுமாறு நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - சனிக்கிழமை) ... மொத்த விலை ரூ.5.55 ... விலையில் மாற்றம்: இல்லை ... கறிக்கோழி கிலோ ரூ.112 ... முட்டைக் கோழி கிலோ ரூ.97 ... , மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1,288 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1288 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் சோ்வதற்கான பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா்... மேலும் பார்க்க