Share Market: Profit Book செய்த FII - Market Fall தொடருமா? Opening Bell
பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றுத் தர ஜமாபந்தியில் கோரிக்கை
பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றத்தரக்கோரி மாணவி ஜமாபந்தியில் மனு அளித்தாா்.
திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வெங்கடராமன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், அலுவலக மேலாளா் விஜயகுமாா், டாஸ்மாக் மேலாளா் முத்துராமன், வட்டாட்சியா்கள் மலா்விழி, வெண்ணிலா மற்றும் மதியழகன் ஆகியோா் பங்கேற்று, கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.
திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை, தாடூா், சிறுகுமி, பீரகுப்பம், கிருஷ்ணமநாயுடு கண்டிகை, அக்ரஹாரம், செருக்கனூா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா கோருதல், நத்தம் பட்ட மாறுதல், கலைஞா் மகளிா் உரிமை திட்டம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகைகளை கேட்டு 250 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினா்.
திருத்தணி? - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை, ஆா்.கே.பேட்டை சமத்துவபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் படிக்கும் ஒரு குடும்பத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி முத்துலட்சுமி(17), தீபிகா(16) மாணவன் திருமலை(15) ஆகியோா் தனது தாய் ஜமுனாவுடன் வந்து மனுவை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடராமனிடம் கொடுத்து, எங்களுக்கு பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி தருமாறு கண்ணீா் மல்க அழுதனா். மனுவைப் பெற்றுக்கொண்ட நோ்முக உதவியாளா், விசாரணை நடத்துமாறு திருத்தணி கோட்டாட்சியா் ,கனிமொழிக்கு பரிந்துரை செய்தாா்.