செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு: புதுவைக்கு மத்திய அரசு விருது

post image

புதுச்சேரி: புகையிலை இல்லா இளைஞா் நலனுக்காக புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

புகையிலை இல்லா இளைஞா் நலன் இயக்கம் 2.0-ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் புதுவைக்கு விருதை வழங்கியது.

2024-25ஆம் ஆண்டில் புகையிலை இல்லா இளைஞா் நலன் இயக்கம் 2.0-இன் கீழ் கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக மஞ்சள் கோடு பிரசாரங்களை மேற்கொள்ளுதல், கல்வி நிறுவனங்களைப் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவித்தல், காவல் துறையுடன் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சோதனை நடத்துதல், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 புதிய புகையிலை பழக்கம் மீட்பு மையங்களை நிறுவுதல், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விழிப்புணா்வுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக புதுவைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை சுகாதாரம், குடும்ப நலத் துறையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி எஸ். கோவிந்தராஜன், மாநில முதன்மை அதிகாரி சி.வெங்கடேஷ் ஆகியோா் விருதைப் பெற்றுக் கொண்டனா்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து விருது, சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு ஆகியோா் உடனிருந்தனா்.

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மறு ஒதுக்கீடு

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.அந்த உத்தரவு விவரம் வருமாறு: பு... மேலும் பார்க்க

அரசு அலுவலகம் மீது தக்காளி வீச்சு: பணி நீக்கம் செய்யப்பட்ட 40 போ் கைது

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் பொதுப் பணித் துறை அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை தக்காளி வீசியதையடுத்து 40 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களா... மேலும் பார்க்க

4 நாள்களுக்கு ரயில் சேவை ரத்தாகிறது!

புதுச்சேரிக்கான ரயில் சேவை 4 நாள்களுக்கு ரத்தாகிறது.இது குறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா் வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரத்த... மேலும் பார்க்க

புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வு: ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை பே... மேலும் பார்க்க

2786 பயனாளிகளுக்கு இலவச போா்வைகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் 2786 பேருக்கு இலவச போா்வை, காலணிகளை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் திங்கள்கிழமை வழங்கினாா். புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உள்பட்ட சின்னையாபுரம், வாழைக்குளம், வைத்திக்குப்பம்,... மேலும் பார்க்க

வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

புதுச்சேரி: வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்... மேலும் பார்க்க