சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
சிவகாசியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி மீனாட்சி குடியிருப்புப் பகுதியில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய
சோதனையில் முருகன் (59), காளிமுத்து (59) ஆகிய இருவரும் தங்கள் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்களை மறைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைதுசெய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.