செய்திகள் :

'புதின் சீக்கிரம் இறந்துவிடுவார்!' - ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ஜெலன்ஸ்கி பேச்சு

post image

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதிலிருந்து இந்தப் போரை நிறுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்.

இது குறித்து அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார் ட்ரம்ப். ஆனால், அது கைக்கூடவில்லை.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வி!
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வி!

ஆனால், அதன் பிறகு, சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் பேச்சுவார்த்தையில் 'உடனடி 30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு' ஒப்புக்கொண்டது உக்ரைன்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

இதனிடையில், 'போர் நிறுத்தத்திற்கு தயார்' என்று கூறி, அது சம்பந்தமான சில கேள்விகளையும் கேட்டிருந்தார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில் இன்னமும் அமெரிக்காவிடம் இருந்து வரவில்லை.

'அப்போது போர் நின்றுவிடும்'! - ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஜெலன்ஸ்கி, "அவருடைய வயதை வைத்து பார்க்கும்போது, புதின் சீக்கிரம் இறந்துவிடுவார். அது தான் உண்மை. அப்போது இந்தப் போர் நின்றுவிடும். அதற்கு முன்பு கூட போர் நிறுத்தத்தை எட்டலாம்" என்று பேசியுள்ளார்.

புதினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது போன்ற தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், ஜெலன்ஸ்கி இப்படி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு புதின் மற்றும் போர் நிறுத்தத்திற்கு கடுமையாக முயலும் அமெரிக்காவின் பதிலடி எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்து நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை - வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு அயல் நாடுகளில் இருந்தும், அயல் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி அரசும் மாநில வருவாய்க்காக சுற்றுலாவுக்... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்க... மேலும் பார்க்க

குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.... மேலும் பார்க்க

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க