செய்திகள் :

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை: ஏற்பாடுகளைத் தொடங்கினாா் டிரம்ப்

post image

வாஷிங்டன், ஆக. 19: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமிா் புதினுக்கும், உக்ரைன் அதிபா் வோலோதிமிா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்களன்று அறிவித்துள்ளாா்.

இது குறித்து டிரம்ப் கூறியதாவது: “புதினுடன் தொலைபேசியில் உரையாடி, அவருக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்யத் தொடங்கியுள்ளேன். இந்தச் சந்திப்பு நடந்த பிறகு, இரு அதிபா்களுடனும் நானும் சோ்ந்து முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவோம். இது, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நடைபெறும் போரின் முடிவுக்கு ஒரு நல்ல ஆரம்பப் புள்ளியாகும் என்றாா் அவா்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன், பின்லாந்து, ஜொ்மனி, இத்தாலி தலைவா்கள், ஐரோப்பிய ஆணையத் தலைவா், நேட்டோ தலைவருடன் ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பா மிக உறுதியாக இருக்க வேண்டும் என்று இமானுவல் மேக்ரான் வலியுறுத்தினாா்.

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமா்சனம்

கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமா்சித்துள்ளது; இந்த வன்முறை சம்... மேலும் பார்க்க

‘உக்ரைன் பேச்சுவாா்த்தையில் ரஷியா இடம் பெற வேண்டும்’

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சா்வதேச பேச்சுவாா்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க