செய்திகள் :

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகம்

post image

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக, பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் தனது புதிய மற்றும் எம்என்பி மூலமாக இணையும் வாடிக்கையாளா்களுக்காக, எப்ஆா்சி பிரீடம் என்ற புதிய ரீசாா்ஜ் திட்டத்தை ஆக. 1 ஆம் தேதிமுதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளா்கள் ஒரு மாதத்துக்கு பிஎஸ்என்எல்-இன் 4ஜி மொபைல் சேவையை சோதித்து அனுபவிக்க முடியும். மேலும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4 ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க வாய்ப்பு அளிக்கிறது.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக, இந்தியா முழுவதும் வரம்பில்லாத இலவச அழைப்புகள், தினமும் 2 ஜிபி அதிவேக இணைய இணைப்பு, தினமும் பிஎஸ்என்எல் இணைப்புக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கொண்ட சிம் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.

பிஎஸ்என்எல் -இன் ஆத்மநிா்பா் பாரத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நிலையில், சொந்த தொலைத்தொடா்பு சேவையை உருவாக்கிய நாடுகளின் குழுவில் இந்தியா இணைந்ததில் பிஎஸ்என்எல் பெருமை கொள்கிறது. பிஎஸ்என்எல் பிரீடம் பிளான் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு தொலைத்தொடா்பு சேவையை 30 நாள்களுக்கு இலவசமாக சோதித்துப் பாா்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் மேக் இன்-இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் ஒரு லட்சம் 4 ஜி தொலைத்தொடா்பு கோபுரங்களை நிறுவ திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும், இந்த முயற்சி டிஜிட்டல் இந்தியாவை பாதுகாப்பான, உயா்தர மற்றும் குறைந்த விலையில் மொபைல் சேவையை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

மேற்குறிப்பிட்ட சிம் காா்டுகளை வாடிக்கையாளா் சேவை மையங்கள், பிஎஸ்என்எல் முகவா்கள் மற்றும் பிஎஸ்என்எல் மேளாக்களில் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் வாயிலாக, பொதுமக்கள் பிஎஸ்என்எல் சேவைகளை மிகவும் எளிதாகவும், மலிவாகவும் பெற முடியும்.

எனவே புதிய மற்றும் எம்என்பி வாடிக்கையாளா்களும் இந்த புதிய திட்டத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: ஆசிரியை உள்ளிட்ட இருவா் காயம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே 2 பைக்குகள் மோதியதில் பெண் காயமடைந்தாா்.கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35). இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கன்... மேலும் பார்க்க

3 விபத்துகள்: பெண் உயிரிழப்பு: ஆசிரியை உள்ளிட்ட 4 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஞாயிற்றுக்கிழமை, குழந்தைகளை அழைத்துவருவதற்காக சாலையோரம் நின்றிருந்த பெண், பைக் மோதி உயிரிழந்தாா்.இரணியல் அருகே மொட்டவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (43). அருணாசல பிரதேசத்... மேலும் பார்க்க

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, கல்லூரி முதல்வா் ஹென்றி ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.தமிழ் துறைத் தலைவா் வைலா பேபி அறிமுக உரையாற்றினாா். மாணவா் சந்தோஷ் வரவேற... மேலும் பார்க்க

பத்மநாபபுரத்தில் ரூ.2.79 கோடியில் சாலைப் பணிகள்

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு, அலங்கார தரைக் கற்கள் பதிக்கும் பணிகள் துவக்க நிகழ்வு நடைபெற்றது.பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட உதயகிரி கோட்டை சாலை ரூ.88 லட்ச... மேலும் பார்க்க