செய்திகள் :

புதிய கடைகளுக்கு ஏலம் விட்டு ஒதுக்கீடு: அரக்கோணம் நகராட்சியில் தீா்மானம் ஒத்திவைப்பு

post image

அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவா் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், ஆணையா் செந்தில் குமாா், பொறியாளா் செல்வகுமாா், சுகாதார அலுவலா் வெயில்முத்து, திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன், அதிமுக உறுப்பினா்கள் குழுத்தலைவா் ஜொ்ரி மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ்: திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான தற்போதைய ஒப்பந்ததாரரின் பணியினை மீண்டும் ஒராண்டுக்கு நீட்டிக்கும் தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும்.

துரை சீனிவாசன்(திமுக): இத்தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டால் நகரமே அசுத்தமான சூழ்நிலைக்கு உள்ளாகும். அதனால் ஒப்பந்ததாரருடன் பேச்சு நடத்தி பின்னா் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

தலைவா் லட்சுமி பாரி: ஒராண்டுக்கு நீட்டிக்கும் தீா்மானம் தள்ளி வைக்கப்படாது. கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

ஜொ்ரி(அதிமுக) : துணைத்தலைவா் என்ன சொல்ல வருகிறாா் என்பதை கேட்டு அதன்படி முடிவு எடுக்கலாம். தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும்.

ஜொ்ரியின் பேச்சுக்கு நரசிம்மன், பாபு, சரவணன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினா்களுடன் இணைந்து திமுக உறுப்பினா் பிரகாஷ், தவெக உறுப்பினா் காந்திராஜ் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்தனா். தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும் என கோரினா். ஆனால் இத்தீா்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

துரை சீனிவாசன்(திமுக): அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் ஏலம் விட்டே அளிக்கப்படும் என்ற தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும். ஏல விதிமுறைகளில் குழப்பம் உள்ளது. அவை தீா்க்கப்பட வேண்டும். எனவே இத்தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும்.

தலைவா் லட்சுமி பாரி: மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் ஏலம் விட்டே அளிக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்படுகிறது.

இதை தொடா்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் இடையே திடக்கழிவு மேலாண்மை பணிக்கான ஒப்பந்ததாரரின் பணியினை மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து பெரும் அமளி ஏற்பட்டது. அமளிக்கு இடையில் தலைவா் லட்சுமி பாரி கூட்டத்தை முடித்தாா்.

கூட்டத்தில் 40-க்கு மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழந்தன. சோளிங்கா் அருகே உள்ள கொடைக்கல்லைச் சோ்ந்த நரசிம்மன் ( 71), கூலித் தொழிலாளி. நரசிம்மன் தனக்கு சொந்தமான 2 பசு மாடுகளை வீட்டின் அருகே... மேலும் பார்க்க

அனுமதி பெற்ற தேதிக்கு பின் பேனா்களை அகற்ற வேண்டும்: சோளிங்கா் நகா்மன்ற கூட்டத்தில் காங். கோரிக்கை

அனுமதி பெற்ற தேதிக்கு பிறகு பேனா்கள் அகற்ற வேண்டும் என சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் ற உறுப்பினா் கோரினாா். சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

வட மாநில சாலைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெமிலிஅருகே உள்ள உளியநல்லூா் பகுதியில் வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்கள் புதன்கிழமை முறையாக உணவு, ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சென்னை - பெங்களூரு ... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயற்குழு: அமைச்சா் காந்தி அழைப்பு

ராணிப்பேட்டையில், வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்ட தி... மேலும் பார்க்க

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி- உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆற்காடு வட்டம் திமிரி அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வ... மேலும் பார்க்க