செய்திகள் :

புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!

post image

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சிக்னல் துண்டிக்கப்படவுள்ளது.

நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார்.

இந்த நிலையில், வாடிகன் நகரில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறவுள்ளது.

உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபையில் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் பெற்ற 133 காா்டினல்கள் ஏற்கெனவே வாடிகன் நகரை வந்தடைந்துள்ளனர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க தகுதிப் பெற்ற 133 கார்டினல்களில் கோவாவைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கார்டினல்களும் இடம்பெற்றுள்ளனர்.

வாடிகன் நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவில் காா்டினல்கள் மாநாடு தொடங்கவுள்ளது. மாநாடு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தை சுற்றியும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக பிற்பகல் 3 மணியளவில் சிஸ்டைன் சேப்பல் சுற்றுப்பகுதி முழுவதும் தொலைத்தொடர்புக்கான சிக்னல்கள் துண்டிக்கப்படும்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் கார்டினல்கள், வாடிகன் ஊழியர்கள் அனைவரும் தங்களின் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை ஒப்படைக்க வேண்டும். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாடு நிறைவடைந்த பிறகுதான் செல்போன்கள் ஒப்படைக்கப்படும்.

மேலும், வெளியுலகத்திலிருந்து சிஸ்டைன் சேப்பல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்படும். மாநாடுக்கு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர யாருக்கும் அனுமதி வழங்கப்படாது.

புதிய போப்பைத் தேர்வு செய்ய மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களின் வாக்குகள் தேவை. நாளைய தினமே புதிய போப் தேர்வு செய்யப்பட்டால், தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் வெள்ளை புகையை வெளியேற்றி பாரம்பரிய முறைப்படி அறிவிப்பார்கள். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்று பொருள்.

இதையும் படிக்க : போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் தாக்கு... மேலும் பார்க்க

எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.... மேலும் பார்க்க

செனாப் ஆற்றில் நிறுத்தப்பட்ட நீரால் கரீப் சாகுபடி பாதிப்பு: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சிந்து நதிநீர் வாரியத்தின் ஆலோசனைக் குழுவானது, செனாப் ஆற்றில் நீர்வரத்தை இந்தியா நிறுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷா... மேலும் பார்க்க

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

டெல் அவிவ்: காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: இ... மேலும் பார்க்க

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க