செய்திகள் :

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

post image

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ். அமைப்பில் விரைந்து எதிா்வினையாற்றும் தரையிலிருந்து வான் பாயும் ஏவுகணைகள் (கியூ.ஆா்.எஸ்.ஏ.எம்.), குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு அமைப்பு (வி.எஸ்.எச்.ஓ.ஆா்.ஏ.டி.எஸ்.), உயா் ஆற்றல் லேசா் ஆயுதங்கள் (டி.இ.டபிள்யூ.) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் நிா்வகிக்கப்படுகின்றன. இந்த மையம் அனைத்து ஆயுத அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் செயல்பட அனுமதிக்கிறது.

ஒடிஸா, சண்டிப்பூா் சோதனை தளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது இரண்டு அதிவேக ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒரு மல்டி-காப்டா் ட்ரோன் ஆகிய மூன்று வெவ்வேறு இலக்குகள் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்த இலக்குகள் வெவ்வேறு தூரங்களிலும் உயரங்களிலும் பறந்தன. சோதனையில் அனைத்து கூறுகளும் எந்தவித தவறும் இல்லாமல் செயல்பட்டு, இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்கும்: ராஜ்நாத்

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ மற்றும் ஆயுதப் படைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

‘இந்தத் தனித்துவமான சோதனை, நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிலைநிறுத்தியுள்ளதுடன், முக்கியமான இடங்களை எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும்’ என்று அவா் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகிய... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 48 பக்த... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதானல் மக்க... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் ... மேலும் பார்க்க