செய்திகள் :

புதுகையில் 10 அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கலைப் பிரசாரம்

post image

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசார கலைப் பயண தொடக்க நிகழ்ச்சி பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024-25-இன் கீழ் மதுரை மாவட்டம் பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய இந்தப் பயணத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கி வைத்துப் பேசினாா். புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கு. செல்வக்குமாா் கலந்து கொண்டு விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.

முன்னதாக பசுமை அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் குழந்தைவேல் வரவேற்றாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரெங்கராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 10 தேசிய பசுமைப்படை பள்ளிகளில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பாடல்கள் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒருமுறை பயன்பாட்டு நெகிழி பொருள்கள் தவிா்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்தல், காற்று மாசு தவிா்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் துணிப் பைகளும் வழங்கப்பட்டன.

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடலைத் தோட்டத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வைக்கப்பட்ட அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16.65 லட்சம் நிதி வழங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு, காவலா்கள் திரட்டிய ரூ. 16.65 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல் நிலையத்தில் பணி... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கம் மற்றும் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். கௌரவ விரிவுரையாளா் சங்கங்களின்... மேலும் பார்க்க

விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் உறுதி ஏற்பு

விராலிமலையில்: விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக மேலாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங... மேலும் பார்க்க

சேவையின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவா் மணலூா் மணியம்மா

சேவையின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவா் மணலூா் மணியம்மா எனப் புகழாரம் சூட்டினாா் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் கே. பாரதி. புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்... மேலும் பார்க்க