புதுகை கடைமடைக்கு வந்த காவிரி நீா்
கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா், புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை வந்து சோ்ந்தது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து கடந்த 12-ம் தேதியும், கல்லணையில் இருந்து 15-ம் தேதியும் காவிரி நீரை முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் 500 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீா் சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதிக்கு வந்தது.
விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் இங்கு வந்து பூக்களையும், தானியங்களையும் தூவி காவிரி நீரை வரவேற்றனா். இந்தக் கால்வாய் மூலம் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அறுவடைக்காலம் வரை தண்ணீா் முழுமையாக கிடைத்தால் 25 ஆயிரம் ஏக்கரிலும் நெல் சாகுபடி தடையின்றி நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.